அஞ்ஞஶ்சா1ஶ்ரத்3த3தா4னஶ்ச1 ஸந்ஶயாத்1மா வினஶ்யதி1 |
நாயம் லோகோ1ஸ்தி1 ந ப1ரோ ந ஸுக2ம் ஸந்ஶயாத்1மன: ||40||
அஞ்ஞஹ—-அறியாமையில் உள்ளவரும்; ச—--மற்றும்; அஶ்ரத்ததானஹ--—விசுவாசம் இல்லாதவரும்; ச—-மற்றும்; ஸந்ஶய—--ஐயமுற்ற; ஆத்மா--—ஒரு நபர்; ந-—இல்லை வினஶ்யதி—--அழிகிறார்; அயம்-லோகஹ--—இவ்வுலகிலும்; அஸ்தி—ஆகும்; ந--—இல்லை; பரஹ--—அடுத்ததிலும்; ந-—இல்லை; ஸுகம்—--மகிழ்ச்சி; ஸந்ஶய-ஆத்மனஹ----ஐயமுற்ற ஆத்மாவுவிற்கு (தி—இல்லை)
BG 4.40: ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகப்படும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ப4க்1தி1 ரஸாம்ரித்1 ஸிந்து4 நம்பிக்கை மற்றும் அறிவின் அடிப்படையில் ஆன்மீக பயிற்சியாளர்களை மூன்று வகையாக பிரிக்கிறது
ஶாஸ்த்1ரே யுக்1தௌ1 ச1 நிபுணஹ ஸர்வதா2 த்4ருட4 நிஶ்ச1யஹ
ப்1ரௌட4 ஶ்ரத்3தோ4 ‘தி4கா1ரீ யஹ ஸ ப4க்1தா1வுத்1த1மோ மத1ஹ
யஹ ஶாஸ்த்1ராதி3ஷ்வனிபு1ணஹ ஶ்ர்த்3தா4வான் ஸ து1 மத்4யமஹ
யோ ப4வேத்1 கோ1மல ஶ்ரத்3த4ஹ ஸ க1னிஷ்டோ2 நிக3த்4யதே1 (1.2.17–19)
'உயர்ந்த ஸாதகர் (ஆன்மீக ஆர்வமுள்ளவர்) வேதங்களை அறிந்தவர் மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் இருப்பவர். நடுத்தர வர்க்க ஆன்மீக ஆர்வமுள்ளவர் வேதங்களை அறியாதவர், ஆனால் கடவுள் மற்றும் குருவின் மீது நம்பிக்கை கொண்டவர். மிகக் குறைந்த வகுப்பை சேர்ந்த ஆன்மீக ஆர்வமுள்ளவருக்கு வேத அறிவும் இல்லை, மற்றும் நம்பிக்கையின் கடாட்சமும் இல்லை.’ மூன்றாவது வகையைப் பொறுத்தவரை, ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், அத்தகைய நபர்கள் இம்மையிலோ அல்லது மறுமையிலோ அமைதியை அடைய முடியாது. உலக செயல்களுக்குக்கூட நம்பிக்கை தேவை. உதாரணமாக, ஒரு பெண் ஒரு உணவகத்திற்குச் சென்று உணவை ஆர்டர் செய்தால், அந்த உணவகம் தனது உணவில் விஷத்தைக் கலக்காது என்று அவள் நம்புகிறாள். இருப்பினும், அவள் சந்தேகத்தால் முற்றுகையிடப்பட்டு, ஒவ்வொரு உணவுப் பொருளையும் முதலில் இரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பினால், அவள் எப்படி மகிழ்ந்து தன் உணவை முடிப்பாள்? இதேபோல், ஒரு நபர் மொட்டையடிப்பதற்காக முடிதிருத்தும் நிலையத்திற்குச் சென்று நாற்காலியில் அமர்ந்தார், முடிதிருத்தும் நபர் தனது கத்தியின் கூர்மையான முனையை அவரது கழுத்திற்கு மேல் நகர்த்துகிறார். இப்போது, அந்த மனிதன் முடிதிருத்துபவனை சந்தேகப்பட்டு, அவனைக் கொன்றுவிடுவானோ என்று அஞ்சினால், அவருடைய பதட்டமான மன நிலையினால் அவனால் அமைதியாக உட்கார்ந்து இருக்க முடியாது. எனவே, சந்தேகம் உள்ளவனுக்கு இம்மையிலோ அல்லது மறுமையிலோ மகிழ்ச்சி இல்லை என்று ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் கூறுகிறார்.